×

பள்ளி வாசலில் நீர் மோர் விநியோகம்

 

கோவை, மே 4: கோவையில் கடந்த சில வாரங்களாக கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் நகரின் முக்கிய இடங்களில் நீர்மோர் பந்தல் அமைத்து உள்ளனர். இந்நிலையில், கோவை அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் நேற்று நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு வந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் நீர்மோர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

இதனை பொதுமக்கள், குழந்தைகள் என பலர் குடித்து மகிழ்ந்தனர். இதில், தலைவர் அமானுல்லா, செயலாளார் பீர்முகமது, பொருளாளர் பக்கீர் முகமது, முத்தவள்ளி ஜாபர் அலி, துணைத் தலைவர்கள் சையது, உசேன் சாகுல் ஹமீத், கமிட்டி உறுப்பினர்கள் ஆஷிக் அகமது, முகமது யூசுப், நிஜாமுதீன், முகமது இப்ராஹிம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

The post பள்ளி வாசலில் நீர் மோர் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Nemor Pandals ,Jamaat ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...